Read Time1 Minute, 17 Second
மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா. ப., அவர்கள் உத்தரவுப்படி, இன்று 02.04.2020-ம் தேதி கரும்பாலை ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களை சோப்பு போட்டு கை கழுவிய பின்னர் உள்ளே அனுமதித்தும், சிரமமின்றி ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்வும் மற்றும் கொரோனா தொற்று நோய் பரவாமல் பொதுமக்களை பாதுகாக்கவும், அண்ணாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. ரமணி அவர்கள் 3 மீட்டர் இடைவெளிவிட்டு பொதுமக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து சமூக விலகளை அனைவரும் பின்பற்றுங்கள் என்றும் அறிவுரைகள் வழங்கியும் பாதுகாப்பு பணியில் காவலர்களை நியமித்தும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்