Read Time57 Second
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் நரியங்காடு காவலர் குடியிருப்பை ஆய்வு செய்தும், அக்குடியிருப்பில் வசித்துவரும் காவலர்கள் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமான அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் திரு.எச்.எம்.ஜெயராம், இ.கா.ப., (தலைமையிடம்), இணை ஆணையாளர் திரு.ஏ.ஜி.பாபு, இ.கா.ப, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை