Read Time1 Minute, 17 Second
மதுரை: மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதி யில் ஒரு லாட்ஜ் முன்பாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த காக்காத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சிவசாமி மகன் முருகன் 22 என்பவரை திடீர்நகர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர் .பெருமாள் தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு காபி கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த தியாகி பாலுஇரண்டாவது தெருவைச்சேர்ந்த சின்னபாண்டி மகன் ராஜேஷ்25என்பவரை திடீர்நகர் போலீசார் கைது செய்துஅவரிடம் இருந்து 95 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி